திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் திருக்கோயில் - தரிசனக் காட்சிகள்:

சிதம்பரத்திலிருந்து 18 கி.மீ பயணத் தொலைவில் அமைந்துள்ளது திருநாரையூர் எனும் தேவாரத் தலம். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பொல்லாப் பிள்ளையார் மிகமிகப் பிரசித்தம். 11 சைவத் திருமுறைகள் வரையிலும் தொகுத்தளித்த நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்து வாழ்ந்திருந்த புண்ணிய ஷேத்திரம், அவசியம் நேரம் அமைத்துக் கொண்டு இத்தலத்தினைத் தரிசித்து மகிழ்வோம்!!!
 

திருப்புகழ் போற்றும் பிள்ளையார்பட்டி (விநாயக மலை):

சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் திருக்கோயில் 'திருப்புகழ் பாடல் பெற்றுள்ள திருத்தலமாகவும் விளங்குகின்றது' என்பது பலரும் அறிந்திராததொரு இனிய குறிப்பு. அருணகிரிப் பெருமான் இத்தலத்துறையும் கந்தக் கடவுளை 'விநாயகமலை உறை வேலா' என்று போற்றுகின்றார். 

தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
     தனதன தானா தனாதன ...... தனதான

சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
     சததள பாதா நமோநம ...... அபிராம

தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
     சமதள ஊரா நமோநம ...... ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
     பரிமள நீபா நமோநம ...... உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
     பவுருஷ சீலா நமோநம ...... அருள்தாராய்

இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூளேற வானவர் 
     எவர்களும் ஈடேற ஏழ்கடல் ...... முறையோ!என்

றிடர்பட மாமேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் 
     இகல்கெட மாவேக நீடயில் ...... விடுவோனே

மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும்
     வசுவெனும் ஆகார ஈசனும் அடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
     வனசரர் ஆதாரமாகிய ...... பெருமாளே.