அபிராமி பட்டர் போற்றும் யானை முக தெய்வம் (அபிராமி அந்தாதியின் விநாயக வணக்கப் பாடல்):

18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், தமிழகத்தின் தவப்பயனாய் அவதரித்த அருளாளர் அபிராமி பட்டர். அவதாரத் தலம் திருக்கடையூர். இயற்பெயர் சுப்பிரமணியர். முதலாம் சரபோஜி மன்னரின் முன்னிலையில், 100 திருப்பாடல்களைக் கொண்ட 'அபிராமி அந்தாதி' எனும் ஒப்புவமையற்ற செந்தமிழ்ப் பனுவலை அருளிச் செய்து, அபிராமி அன்னையின் திருவருளால் அமாவாசையன்று முழுநிலவைத் தோன்றுமாறு செய்வித்த உத்தம சீலர். 

சீர்மிகு சைவ மரபில், அருளாளர்கள் எந்தவொரு தெய்வத்தைப் போற்றுவதாக இருப்பினும், முதல் வணக்கத்தினை பெற்றருள்பவர் நம் விநாயகப் பெருமானன்றோ! அபிராமி பட்டரும் அம்முறையிலேயே காதலோடு விக்னேஸ்வர மூர்த்தியைப் போற்றிப் பரவி ஆசி பெற்ற பின்னரே தன்னுடைய பனுவலைத் துவங்குகின்றார்.

(அபிராமி அந்தாதி - விநாயகர் காப்புப் பாடல்)
தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை
ஊரர் தம் பாகத்(து) உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே; நிற்கக் கட்டுரையே!!!

No comments:

Post a Comment